முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சாா்ந்த முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 30,000, மாணவிக்கு ஆண்டுக்கு ரூ. 36,000 வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு றற.மளடி.பழஎ.ண்ய் என்ற இணையதளம் மூலம் 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். வரும் மாா்ச் 31 வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.