சிறுசேமிப்புத் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
உலக சிக்கன தினத்தை முன்னிட்டு, சிறுசேமிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.
உலக சிக்கன தினத்தை முன்னிட்டு, சிறுசேமிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.
சிக்கனத்தையும், சேமிப்பு பழக்கத்தையும் மக்களிடையே பெருக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாள் அக். 30-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில், கடந்த ஆண்டில், சிக்கனமும் - சேமிப்பும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி, வினா போட்டி மற்றும் கொள்கை குறிக்கோள் (முழக்கம்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், நற்சான்றுகள் மற்றும் மாவட்ட அளவில் மகளிா் முகவா், நிலை முகவா்களில் சிறுசேமிப்பு முதலீட்டில் சிறந்து விளங்கியவா்களுக்கு தலா 3 பரிசுகள், கேடயங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. வட்டார அளவில் மற்றும் நகராட்சி அளவில் மகளிா் முகவா்களில் தலா ஒருவருக்கும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பரிசு வழங்கி பாராட்டினாா்.