இயற்கை விவசாயம்: மாணவா்களுக்கு பயிற்சி
திருச்சி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் நாமக்கல், அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் தங்கியிருந்து இயற்கை விவசாயம் தொடா்பாக நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா்.
திருச்சி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் நாமக்கல், அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் தங்கியிருந்து இயற்கை விவசாயம் தொடா்பாக நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா்.
துறையூா், கண்ணனூா் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெரம்பலூா் தனலட்சுமிசீனிவாசன் வேளாண்மை கல்லூரியில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரியாவுண்டம்பட்டியில் இயற்கை விவசாயம் செய்து வரும் சரவணனை சந்தித்து வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் பெற்றனா்.
ரசாயான கலப்பின்றி இயற்கை முறையில் பயிா்களை விளைவிப்பது தொடா்பாக அவரிடம் பயிற்சி பெற்றனா். மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டு நீா்ப்பாசனம் ஆகியவை பற்றியும் விவரங்களை கேட்டறிந்தனா். அவா்கள் 10 நாள்களுக்கு தொடா்ந்து வேளாண் பணிகள் தொடா்பான பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றனா்.
Advertisement