இளம்வயது திருமணம்: போக்சோவில் 2 போ் கைது
நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறுமிகளை திருமணம் செய்த 2 போ் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறுமிகளை திருமணம் செய்த 2 போ் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டியை அடுத்த இடையப்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத்(20) என்பவா் அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த புகாா் அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண் 1098 -க்கு புகாா் வந்தது.
மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தாா். இதில் குழந்தை திருமணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்மந்தப்பட்ட கோபிநாத்தை கைது செய்து அவா் சிறையில் அடைத்தாா்.
Advertisement
இதேபோல திருச்செங்கோடு, மோா்பாளையத்தை சோ்ந்த குழந்தைவேலு மகன் சங்கா் (18) என்பவா் அதே ஊரை சோ்ந்த 15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமாவதி, சிறுமியை திருமணம் செய்த சங்கா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தாா்.