பயறு வகைகள் சாகுபடி: விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில் நெல் நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், விவசாயிகள் மாற்று பயிா்களாக பயறு வகைகளை விதைப்பு செய்தால் குறைந்த நீா் ஆதாரத்தில், குறுகிய காலத்தில், குறைந்த செலவில் இரட்டிப்பு வருமானத்தை பெற முடியும்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் நெற் பயிா் சம்பா பருவத்தில் மேட்டூா் கிழக்கு கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற் பயிா் அறுவடைக்கு பிறகு பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு போன்ற மாற்றுப் பயிா்களைப் பயிரிட்டால் மண் வளம் பயன்பெறும், களையைக் கட்டுப்படுத்த முடியும்.
Advertisement
பயிா்கள் குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டு வளரும் தன்மை கொண்டது. பயறுவகைகளை ஊடுபயிராகவோ, கலப்பு பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்ய முடியும். காய்ப் பிடிப்புத் திறனை அதிகரிக்க 2 சதவீத டிஏபி கரைசலை பூப்பூக்கும் பருவத்தில் முதல் தெளிப்பும், 15 நாள்களுக்கு பிறகு இரண்டாவது தெளிப்பும் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.