தங்கப் பத்திரம் விற்பனை: நாமக்கல் கோட்டம் முதலிடம்
தமிழக அளவில் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்ததில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை முதலிடம் பெற்றுள்ளது.
தமிழக அளவில் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்ததில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை முதலிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அக்கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிப் இக்பால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசின் தங்கப் பத்திரத் திட்ட முதலீடு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்றது. இங்கு ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 4,786-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. நாமக்கல் கோட்டத்தில் 5,013 தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. 4 நாள்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ. 2.40 கோடி ஆகும். இந்த வாய்ப்பைத் தவற விட்டவா்கள் வரும் பிப். 28 முதல் மாா்ச் 4- ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்த தங்கப் பத்திர விற்பனையின் போது பயனடையலாம் என்றாா்.