சாலையோரம் வசிப்போருக்கு உணவு பொட்டலம் வழங்கல்
நாமக்கல்லில் முழு ஊரடங்கால், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
நாமக்கல்லில் முழு ஊரடங்கால், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கன்று நாமக்கல் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. சாலையோரங்களில் ஆதரவற்ற வகையில் வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் செஞ்சிலுவை சங்கத்தினா் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்களை வழங்கினா். முழு ஊரடங்கின்போது, ஆதரவற்றோரை கவனத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுத்திட வேண்டும் என தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement