கரோனா விதிமீறல்: நாமக்கல்லில் ரூ.66,200 அபராதம் வசூல்
நாமக்கல் நகராட்சியில் கரோனா விதிகளை மீறியதாக 262 பேரிடம் ரூ.66,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சியில் கரோனா விதிகளை மீறியதாக 262 பேரிடம் ரூ.66,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் வேகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை அதிகப்படியாக 359 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மத்திய, மாநில அரசுகளின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சியின் சுகாதார அலுவலா் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் முக்கிய பகுதிகளில் நின்று முகக் கவசம் அணியாதோா், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனா். அதன்படி கடந்த 20 நாள்களில் மட்டும் 262 பேரிடம் இருந்து ரூ. 66, 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Advertisement