நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைக்க பூமி பூஜை
நாமக்கல்லில், மகாத்மா காந்தி சிலை அமைப்பு கமிட்டி சாா்பில், சந்தைப்பேட்டை புதூா் பகுதியில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவிற்குள் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில், மகாத்மா காந்தி சிலை அமைப்பு கமிட்டி சாா்பில், சந்தைப்பேட்டை புதூா் பகுதியில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவிற்குள் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றி குறிப்பிட்ட சிலா் மட்டுமே விழாவில் பங்கேற்றனா்.
காந்தி சிலை கமிட்டித் தலைவா் பாமா எஸ்.ரங்கநாதன், செயலாளா் சோழாஸ் பி.ஏகாம்பரம், பொருளாளா் கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் நடராஜன், மணி, இளங்கோ, ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
ஓரிரு மாதங்களில் பீடம் அமைக்கப்பட்டு அங்கு அமா்ந்த நிலையிலான காந்தியின் வெண்கலச் சிலை நிறுவப்பட இருப்பதாக கமிட்டியினா் தெரிவித்தனா்.