முகப்பு
நாமக்கல்

குடியரசு தின விழா: நாமக்கல்லில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல்லில், குடியரசு தின விழாவையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

நாமக்கல்லில், குடியரசு தின விழாவையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நாட்டின் 73-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் போலீஸாருக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கியை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனா்.

வரும் 26-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். இதனையொட்டி, விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி நாமக்கல் நகராட்சி பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.