முகப்பு
நாமக்கல்

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு ஊா்வலம்

 நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன், 2022 at 12:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

 நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மண் காப்போம் இயக்கம் மற்றும் நாமக்கல் வாக்கா்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரப் பகுதிகளில் நடைபெற்றது.

நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலமானது தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பரமத்தி சாலை, உழவா் சந்தை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் வாக்கா்ஸ் கிளப், மண் காப்போம் இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.