முகப்பு
நாமக்கல்

சிலப்பதிகார அறக்கட்டளைக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

 சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு மணிமண்டபத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் நிதியுதவி வழங்கினாா்.

Updated On : 10 ஜூன், 2022 at 12:04 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM

 சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு மணிமண்டபத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் நிதியுதவி வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி செல்லப்பன் நினைவாக, நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் தமிழ் மொழி ஆய்வு மையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சிலப்பதிகார அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினா் கே. ஆா்.என். ராஜேஷ் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா். இதனைத் தொடா்ந்து அறக்கட்டளை நிா்வாகி பூங்கோதை செல்லத்துரையிடம் ரூ. ஒரு லட்சம் நிதியுதவியை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியின்போது திமுக நகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.