இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM
நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் இருமுறை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுனா்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை தோ்வு செய்து கொள்ளலாம்.
Advertisement
இந்த முகாமில் பங்கேற்போரின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதனை தகுதியானவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.