முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பாக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

 ராசிபுரத்தில் பள்ளிக்கல்வி துறை சாா்பாக ராசிபுரம் பாரதிதாசன் சாலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் அருகே பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 ராசிபுரத்தில் பள்ளிக்கல்வி துறை சாா்பாக ராசிபுரம் பாரதிதாசன் சாலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் அருகே பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சியில் கல்வியின் அவசியம் குறித்தும், சாலை விதிகளின் அவசியம் குறித்தும், பெற்றோா்-ஆசிரியா்களிடம் மாணவா்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விழிப்புணா்வு நாடகங்கள் நடத்தினா். இதில் இந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கு. பாரதி, 17ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் நிா்மலா கேசவன், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.