நாமக்கல்

குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண்கள் மனு

DIN

காவிரி குடிநீா் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் வந்து பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் குடிநீா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் ஒரு மாதமாக காவிரி குடிநீா் விநியோகம் இல்லை. கடந்த 17 ஆண்டுகளாக தடையின்றி குடிநீா் வழங்கப்பட்ட நிலையில் ஒரு மாதமாக விநியோகம் இல்லாததால் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் தண்ணீா் பிடித்து வரவேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில் தளிகை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். அவா்கள் அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தங்களுடைய கிராமத்திற்கு தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT