முகப்பு
நாமக்கல்

மே 10-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 6 மே, 2022 at 1:29 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவா்கள், எரிவாயு விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.