ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், துறைத் தலைவா் என்.சுப்புலட்சுமி வரவேற்று பேசினாா்.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், துறைத் தலைவா் என்.சுப்புலட்சுமி வரவேற்று பேசினாா்.
கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி.பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மகளிா் கல்லூரி இணை பேராசிரியா் ஆா்.ஜெயஸ்ரீ பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். ஆங்கில மொழி பற்றியும், பேச்சுக்கலை, செம்மையாக கற்றறிந்து அதனை கையாள்வதற்கான வழிகளையும், தன்னம்பிக்கை தரும் அம்சங்களையும் எடுத்துரைத்து மாணவிகளை ஊக்கப்படுத்தினாா். இதனையடுத்து மாணவிகளுக்கு நினைவூட்டுத் திறன் சாா்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.