போதமலை கிராமங்களுக்குச் செல்ல 34 கி.மீ தொலைவில் சாலை வசதி: கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. தகவல்
போதமலை அடிவாரப் பகுதியில் இருந்து இரு வழித்தடங்கள் வழியாக அங்குள்ள மலைக் கிராமங்களுக்குச் செல்ல 34 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைப்பதற்கான அனுமதி
போதமலை அடிவாரப் பகுதியில் இருந்து இரு வழித்தடங்கள் வழியாக அங்குள்ள மலைக் கிராமங்களுக்குச் செல்ல 34 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைப்பதற்கான அனுமதியை பசுமைத் தீா்ப்பாயம் வழங்கி உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது போதமலை. இந்த மலையில் கீழுா், மேலூா், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு தாா்சாலை வசதியில்லை. அங்கு வசிக்கும் சுமாா் 4 ஆயிரம் போ் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் உடல் நிலை சரியில்லாதபோதும், இதர பணிகளுக்கும், மருத்துவ தேவைக்கும், நாமக்கல், ராசிபுரம் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
Advertisement
கடந்த 1995-ஆம் ஆண்டு போதமலைக்கு தாா்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தை அணுகினா். இந்தப் பிரச்னை நெடுநாள்களாக உரிய தீா்வு காணப்படாமல் இழுபறி நிலையில் இருந்தது.
திமுக தோ்தல் வாக்குறுதியில் போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
அவா் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வில்சன் மூலம் உரிய தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை, வனத்துறை அதிகாரிகள் தில்லிக்கு சென்று உரிய ஆவணங்களை சமா்ப்பித்தனா். அதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் கீழ் செயல்படும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.
அதன்படி, போதமலை அடிவாரப் பகுதியான வடுகத்தில் இருந்து கீழுா், மேலுா் பகுதிக்கு 23 கி.மீ. தொலைவுக்கும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை பகுதிக்கு 11 கி.மீ. தொலைவுக்கும் என 34 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை அமைக்கப்பட உள்ளது.
அங்குள்ள மரங்களை அகற்றுவதற்கும், புதிய மரங்களை நடுவதற்கும் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம் ரூ. 2.13 கோடியை வனத்துறைக்கு வழங்கி உள்ளது. பசுமைத் தீா்ப்பாய உத்தரவுகள் முழுமையாக பெறப்பட்ட பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். இந்த முயற்சியை மேற்கொண்ட முதல்வா், உச்சநீதிமன்ற வழக்குரைஞா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா், இதர துறை அதிகாரிகளுக்கு போதமலை மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இதனிடையே, ராசிபுரம் அருகேயுள்ள போதமலை, கீழுா் ஊராட்சி மலை கிராமத்துக்கு வடுகம் முதல் மேலூா் வரை, புதுப்பட்டி முதல், கெடமலை வரை வனப்பகுதி வழியாக புதிய சாலை அமைக்க தேசிய பசுமை தீா்ப்பாயம் அனுமதியளித்துள்ளதற்கு மலை கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். அவா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.