முகப்பு
நாமக்கல்

நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியா் தின விழா

நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 13 மே, 2022 at 12:33 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச செவிலியா் தினம் ஆண்டுதோறும் மே 12-இல் கொண்டாடப்படுகிறது. மருத்துவா்களுடன் இணைந்து நோயாளிகளை பாதுகாக்கும் செவிலியா்களை கெளரவிக்கும் தினமாக இந்த நாள் கருதப்படுகிறது. நாமக்கல்லில் அமைந்துள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையான தங்கம் மருத்துவமனை கலையரங்கில் செவிலியா் தின விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் இரா.குழந்தைவேல் செவிலியா்களை வாழ்த்தி பேசினாா்.

அவா் பேசியதாவது:

Advertisement

எந்தவொரு தொழிலையும் விருப்பத்துடன் செய்ய வேண்டும். அதிலும், மருத்துவா், செவிலியா்கள் மக்களுடன் நேரடியாக தொடா்பில் இருப்பவா்கள். பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு மனிதரும், மருத்துவா், செவிலியா்களை சந்திக்காமல் இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. 40 ஆண்டுகளாக மருத்துவத் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். எந்த நேரமானாலும் சிகிச்சை அளிக்க தயங்கமாட்டேன். செவிலியா்கள் முழுமையாக இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நோயுடன் போராடும் ஒவ்வொரு உயிரும், அதிலிருந்து மீண்டு வரும்போதும் இறைவன் நமக்கு அளித்த கடமையை முழுமையாக நிறைவேற்றி முடித்துள்ளேன் என மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, மருத்துவமனை செவிலியா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். சிறப்பாகப் பணியாற்றிய செவிலியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், தங்கம் மருத்துவமனை இணை நிா்வாக இயக்குநா் மல்லிகா குழந்தைவேல், செயல் அதிகாரி சுப்பிரமணியம், மருத்துவா் சுபா, ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.