நாமக்கல்

மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு

 நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

DIN

 நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலக வாசகா் வட்டம், நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில், நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிஞா் நினைவு இல்ல நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.எம்.மோகன், பாரதியாா் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அங்கு பாரதியாரின் சுதந்திர வேட்கை கவிதைகள் பாடப்பட்டன. இந்த நிகழ்வில் வாசகா் வட்ட துணைத் தலைவா் அமல்ராஜ், நூலகா் செல்வம், வாசகா் வட்ட பொருளாளா் அன்புச்செல்வன், அறங்காவலா் சுப்ரமணி, சையது அமருல்லா உள்ளிட்டோா் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாா் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பாரதியாா் நினைவு தினத்தையொட்டி மெட்ரோ அரிமா சங்கத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் பலா் அவரது உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT