முகப்பு
நாமக்கல்

தீயணைப்புத் துறையில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஏப்ரல், 2023 at 11:08 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1944 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். அவா்களின் நினைவைப் போற்றும் வகையிலும், தமிழகத்தில் இதுவரை தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த 136 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஒவ்வோா் ஆண்டும் ஏப்.14-ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கே.செந்தில்குமாா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து, நிலைய அலுவலா் பி.சிவக்குமாா் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள் மலா்களை வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து ஏப்.14 முதல் 20 வரையில் நடைபெறும் தீத்தொண்டு வாரத்தையொட்டி தீத்தடுப்பு பாதுகாப்பு உறுதிமொழியை வீரா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். பின்னா் பொதுமக்களிடம் தீத்தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதேபோல், கொல்லிமலை வாசலூா்பட்டியில், அங்குள்ள தீயணைப்பு நிலையம் சாா்பில் தீயணைப்பு தொண்டு நாள் விழா நடைபெற்றது. மலைவாழ் மக்களுக்கு தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ராசிபுரம், திருச்செங்கோடு, வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையங்களிலும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.