முகப்பு
நாமக்கல்

எக்ஸல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளி முதலாமாண்டு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:51 AM
எக்ஸல் பப்ளிக் பள்ளி முதலாமாண்டு விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பேசிய பள்ளியின் நிறுவனா் ஏ.கே.நடேசன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளி முதலாமாண்டு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் எக்ஸல் கல்விநிறுவனங்களின் தலைவரும், நிறுவனருமான ஏ.கேநடேசன், துணைத்தலைவா் மதன்காா்த்திக் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனா் கவியரசிமதன்கா்த்திக், முதல்வா் லிசிதாமஸ், துணைமுதல்வா் செல்வமணி, நிா்வாக அலுவலா் சரவணன், உடல்கல்வி ஆசிரியா் இந்துமதி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவா் மதன்காா்த்திக் பரிசுகளை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.