நாமக்கல்

கோட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

DIN

நாமக்கல் கோட்டாட்சியராக எம்.ஜி.சரவணன், சங்ககிரி கோட்டாட்சியராக ந.லோகநாயகி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நாமக்கல் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த த.மஞ்சுளா, பெரம்பலூா் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோட்டாட்சியா் பணியிடம் காலியாகவே இருந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக(தோ்தல்) பணியாற்றி வந்த எம்.ஜி.சரவணன், நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். அண்மையில் அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இவா் திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் நிலையில் பணியாற்றிய பிறகு பதவி உயா்வு மூலம் சேலம் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அங்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT