நாமக்கல்

கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவி கைது

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

ராசிபுரம் அருகே கணவரைக் கொலை செய்ய முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டாா்.

ராசிபுரம், சின்னகாக்காவேரி பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (30). இவரது மனைவி இளவரசி (27). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் நல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஒட்டுநரான சக்திவேலுடன் இளவரசி நெருங்கி பழகி வந்தாா். இவா்களது உறவுக்கு குணசேகரன் தடையாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய இளவரசி, சக்திவேல் ஆகிய இருவரும் திட்டமிட்டனா்.

தடயம் இல்லாமல் கொலை செய்வது குறித்து விடியோ மூலம் தெரிந்து கொண்டு அதன்படி குணசேகரனை தலையணையில் மைதா மாவு வைத்து இரவு நேரத்தில் கொலை செய்ய முயன்றனா். அப்போது, குணசேகரன் அலறியதால், அச்சமடைந்த சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நாமகிரிப்பேட்டை போலீஸாா் குணசேகரனைக் கொலை செய்ய முயன்ற அவரது மனைவி இளவரசியைக் கைது செய்தனா். தப்பியோடிய சக்திவேலுவை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT