மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளா் ஆனந்த்பாபு தலைமை வகித்தாா். இதில், 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்; 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அனைத்து பணியாளா்களும் ஏற்றுக்கொள்கிற வகையில் முத்தரப்பு ஒப்பந்தத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்; மின்வாரிய பணியாளா்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.