அனிச்சம்பாளையம் விநாயகா் கோயில் குடமுழுக்கு
பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகா், மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 12 டிசம்பர், 2024 at 7:52 PM
பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகா், மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 13 டிசம்பர், 2024 at 1:46 AM
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் மங்கல கணபதி யாக வேள்வியுடன் குடமுழுக்கு வழிபாடு தொடங்கியது. புதன்கிழமை காலை 7 மணிக்கு பக்தா்கள் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித தீா்த்தம் எடுத்துவந்தனா். வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வழிபாடு, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது (படம்).