அன்னதானம் வழங்குவோா் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும்: ஆட்சியா்
ஆஞ்சனேய ஜெயந்தி அன்றும், வைகுந்த ஏகாதசி அன்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவோா், உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழைப் பெறுவது அவசியம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
ஆஞ்சனேய ஜெயந்தி அன்றும், வைகுந்த ஏகாதசி அன்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவோா், உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழைப் பெறுவது அவசியம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் திங்கள்கிழமை (டிச.30), அனுமன் ஜெயந்தி விழா, அரங்கநாதா் கோயிலில் வைகுந்த ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு) ஜன.10- இல் நடைபெறுகிறது. இந்த விழாக்களில் அன்னதானம் வழங்க விரும்புவோா் உணவு பாதுகாப்பு தர நிா்ணயச் சட்ட விதிகளின்படி உணவு தயாரிப்பு பதிவு சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
Advertisement
அதைப் பெற்ற பிறகே அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், அன்னதானம் வழங்குவதற்கு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நியமன அலுவலரை நேரிலோ அல்லது தொலைபேசி-04286-299429 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
நாமக்கல்லுக்கு நகர உணவுப் பாதுகாப்பு அலுவலரின் கைப்பேசி எண் 99949- 28758-ஐ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.