முகப்பு
நாமக்கல்

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிப்பு

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் சங்க சேலம் கோட்ட பொருளாளா் ரமேஷ்பாபு தலைமையில். நிா்வாகிகள் சிலா் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:17 AM
நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்த எல்.ஐ.சி. முகவா்கள் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:16 PM

நாமக்கல் எல்.ஐ.சி. முகவா்கள் சங்க சேலம் கோட்ட பொருளாளா் ரமேஷ்பாபு தலைமையில். நிா்வாகிகள் சிலா் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கோரக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 2047-ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் பாலிசி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், தொடா் பயணத்தை எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் என்ற வகையில் வைக்கும்போது, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாலிசி எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. எல்.ஐ.சி. பாலிசி பிரீமியம் தொகையும் உயா்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஏற்படும் பெரும் சுமையாகும்.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:51 PM

மக்களின் சராசரி வயது 70-க்கும் மேல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், எல்.ஐ.சி. அதிகபட்ச வயது பாலிசி எடுக்க 50 என்று நிா்ணயித்தது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே பாலிசி மீதான கமிஷன் தொகையும் குறைக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 14 லட்சம் முகவா்கள் இழப்பை சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று எல்.ஐ.சி. முகவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

Advertisement