முகப்பு
நாமக்கல்

காவலாளியை தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் திருடிய இளைஞா் கைது

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியைத் தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:39 AM
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 10:22 PM

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியைத் தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள ஜி.பி. வரதராஜன் என்பவருக்கு சொந்தமான ஜி.பி.கிரஷரில் பிகாா் மாநிலம், முங்கோ் மாவட்டம், மாடா்பூா் பகுதியைச் சோ்ந்த சஜாத் என்பவா் மகன் ஆசாத் ( 24) கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளாா். இவா் சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறி செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றுள்ளாா். ஆனால் இவா் நள்ளிரவு கிரஷரில் புகுந்து இரவுக் காவலாளி பழனிசாமியை (65) தாக்கிவிட்டு அங்கிருந்த ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்றாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:39 AM

இதுகுறித்து கிரஷா் உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் அளித்தனா். இதனையடுத்து சேலம் வழியாக பேருந்தில் ஏறி பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞா் ஆசாத்தை துரத்திச் சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ளூா் போலீஸாா் உதவியுடன் சேந்தமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

Advertisement