ஓா் அறையில் அமர வைக்கப்பட்டுள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்டோா்  
நாமக்கல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலராக சரவணன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இங்கு புதுப்பித்தலுக்கும், ஓட்டுநா் உரிமம் பெறவும் தினமும் நூற்றுக்கணக்கானோா் வருவா்.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபா் கொடுத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் எட்டு போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை மாலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் ஓா் அறையில் அமர வைக்கப்பட்டு, அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT