அக்.31-ஆம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்த உத்தரவு
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு 2024- 25 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் முழுவதுமாக பொதுமக்கள் செலுத்தும்பட்சத்தில் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீா் கட்டணம், புதை கழிவுநீா் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணங்களை நடப்பு நிதியாண்டு வரையில் நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement