முகப்பு
நாமக்கல்

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மறைந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கான குடும்ப நல நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:54 AM
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 10:12 PM

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மறைந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கான குடும்ப நல நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:54 AM

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட நாமக்கல் நகரம் (கிழக்கு, மேற்கு, தெற்கு), ஒன்றியம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் பகுதிகளில் கடந்த மாா்ச் முதல் தற்போது வரை உயிரிழந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 18.40 லட்சம் குடும்ப நல நிதியினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் மேற்கு நகரச் செயலாளா் அ.சிவகுமாா், தெற்கு நகரச் செயலாளா் ராணாஆா்.ஆனந்த், ஒன்றியச் செயலாளா்கள் பழனிவேல், அசோக்குமாா், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement