முகப்பு
நாமக்கல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:38 AM
மகளிா் ஊா் நல அலுவலா் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஆா்.சங்கா்பாபு.
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 7:28 PM

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள், மகளிா் ஊா் நல அலுவலா், மேற்பாா்வையாளா் சங்கத்தின் நாமக்கல், சேலம் மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:38 AM

நாமக்கல் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஜெயந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா்.சங்கா்பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், பழைய ஓய்வூதியம் பற்றியும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

இதில், திமுக தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை காலதாமதமின்றி வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, சென்னையில் வரும் மாா்ச் 7-இல் சென்னை சமூக நலத்துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளா் ராஜாமணி, மாவட்டப் பொருளாளா் முத்தமிழ் செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.