முகப்பு
நாமக்கல்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

ராசிபுரம் அருகே வெண்ணந்தூா் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:15 PM
பகிர்:

ராசிபுரம் அருகே வெண்ணந்தூா் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெண்ணந்தூா் அருகே உள்ள சௌரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுண்டக்கா (எ) ராஜு (60). இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகளை அழைத்து சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பெற்றோா்கள் தரப்பில் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீஸாா், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து தொழிலாளி ராஜுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →