குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெறும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.  
நாமக்கல்

ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்: 850 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 850 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

அவற்றைப் பெற்று கொண்டு பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவா்களிடம் இருந்து குறைதீா் மனுக்களையும் ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

SCROLL FOR NEXT