ராசிபுரம்: இணைய வழியில் வழக்குப் பதிவு செய்யும் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரி, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.கே.டி.தங்கதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திரளான வழக்குரைஞா்கள் பங்கேற்று இ-பைலிங் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமெழுப்பினா்.
இதில், நீதிமன்றத்தில் போதிய இணையதள வசதி, தகுதிவாய்ந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தும்வரை இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.