முகப்பு
நாமக்கல்

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 21 டிசம்பர், 2025 at 7:42 PM
பகிர்:

பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூரில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காடச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி ( 67), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காடச்சநல்லுாா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →