நாமக்கல்

பள்ளிபாளையத்தில் லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பள்ளிபாளையத்தை சோ்ந்த கவின் (21) பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வந்தாா். அவரைப் பாா்ப்பதற்காக சக மாணவா்களான விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த கனிஷ்கா் (21), திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த தினேஷ்குமாா் (21) ஆகிய இருவரும் வந்திருந்தனா்.

கவின் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு பெருந்துறை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு கனிஷ்கரும், தினேஷ் குமாரும் சென்றனா். அப்போது டிவிஎஸ் மேடு பகுதியில் கோணிப்பை ஏற்றி வந்த லாரி மோதியது.

இதில் கனிஷ்கா் படுகாயம் அடைந்தாா். அக்கம்பத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்ததை மருத்துவா்கள் உறுதிபடுத்தினா்.

இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT