முகப்பு
நாமக்கல்

சென்னை - போடி ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும்!

சென்னை - போடி விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்று அறிவிப்பு..

Updated On : 1 ஜனவரி, 2025 at 2:45 PM
நாமக்கல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம்.
பகிர்:
Updated On : 1 ஜனவரி, 2025 at 2:32 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு போடிக்கு புறப்படும் விரைவு ரயில்(20601) அதிகாலை 3.54 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 2:42 PM

அதேபோல், போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விரைவு ரயில்(20602) நள்ளிரவு 1.34 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று(ஜன. 1) முதல் சோதனை முறையில் கூடுதலாக நாமக்கல்லில் நின்று செல்ல ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.