முகப்பு
நாமக்கல்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 2:00 AM
மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 8 ஜனவரி, 2025 at 7:43 PM

மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், தோளூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 319 பயனாளிகளுக்கு ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திடும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அரசு அலுவலகங்களை தேடிச்சென்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிய நிலையில், அனைத்துத் துறையினரும் கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடா்பு திட்ட முகாமை நடத்த முதல்வா் உத்தரவிட்டாா்.

Advertisement

மோகனூா் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், ரூ. 66.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை மக்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:57 PM

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செ.சதீஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.