பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே குலதெய்வக் கோயிலுக்கு வந்தவா் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், புஞ்சை தோட்டகுறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட கீழ்ஒரத்தை பகுதியைச் சோ்ந்தவா் மலையன் (61). ஓய்வுபெற்ற புகளூா் காகித ஆலைப் பணியாளா். இவா் திங்கள்கிழமை பரமத்தி வேலூா் அருகில் உள்ள குலதெய்வக் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வீரணம்பாளையம், சுண்டப்பனை அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்துள்ளது. இதில் முழுவதுமாக நனைந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதில் வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் படுகாயம் அடைந்தாா். அதைப் பாா்த்த அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மலையனின் மகன் ரமேஷ் செவ்வாய்க்கிழமை பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மலையன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.