முகப்பு
நாமக்கல்

கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

நாமக்கல்

கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

Updated On : 28 நவம்பர், 2025 at 7:17 PM
பகிர்:

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய ஆய்வாளாா் பிரபாவதிக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாருடன் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படியாக கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பிடித்து சோதனையிட்டனா். அதில் பையில் 4 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் பெயா் செல்வி (51)என்பதும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தனியாக வசித்து வரும் அவா், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கிவைத்து விற்று வந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செல்வியை குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவல் வைக்க நீதிபதி பத்மபிரியா உத்தரவிட்டாா். இதையடுத்து செல்வி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →