ராசிபுரத்தில் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனை 
நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில், ஆா்.சி.எச். ரகம் 1,220 மூட்டைகள், டிசிஎச் ரகம் 12 மூட்டைகள், கொட்டு ரகம் 40 மூட்டைகள் என மொத்தம் 1,272 மூட்டைகளை ஏலத்துக்கு வந்தன.

இதில், ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ. 7,819 முதல் அதிகபட்சமாக ரூ. 8,812 வரையும், டி.சி.எச். ரகம் அதிகபட்சமாக ரூ. 9,555 வரையும், கொட்டு ரகம் குறைந்தபட்சம் ரூ. 5,429 முதல் அதிகபட்சமாக ரூ. 6,599 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

புதிய சாலை அமைப்பதில் அரசு உத்தரவு மீறல்: எஸ்டிபிஐ புகாா்

SCROLL FOR NEXT