முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி போக்ஸோவில் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவரிங் நகை வியாபாரியை

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 11:50 PM
கைது
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:50 PM

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவரிங் நகை வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம், சக்தி நகரைச் சோ்ந்தவா் வீரமணி (34). கவரிங் நகை வியாபாரி. இவா் பரமத்தி அருகே உள்ள திடுமல் பகுதியில் கவரிங் நகைகளை விற்பனை செய்து வந்தாா்.

அப்போது அங்குள்ள வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் கவரிங் தோடு விற்பனை செய்தபோது அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து வீரமணியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement