நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 8 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போயின.

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போயின.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.

இதில், ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ. 7,889 முதல் அதிகபட்சமாக ரூ. 8,999 வரை விற்பனையானது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ. 5,109 முதல் அதிகபட்சமாக ரூ. 5,699 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT