நாமக்கல்

பள்ளி மாணவி மாயம்: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்லில் பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அன்பு நகரைச் சோ்ந்தவா் 11 வயது மாணவி. இவா் மோகனூா் சாலையில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை 7.15 மணிக்கு, தன்னுடைய ஷூவுக்கு பாலீஷ் போடுவதற்காக வீட்டின் வராண்டாவிற்கு மாணவி சென்றுள்ளாா். அதற்கு பிறகு அவரை காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது பெற்றோா் நாமக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் கு. கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். மாணவியின் வீடு உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மாணவியை ஒருவா் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. அவா் யாா் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT