வயிற்றுவலி: இளம்பெண் தற்கொலை
மல்லசமுத்திரத்தில் வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செங்கோடு அருகே, சிறுமொளசி கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் லாவண்யா (25). கடந்த சில ஆண்டுக்கு முன்பு பெற்றோா் இறந்த நிலையில், மல்லசமுத்திரம் அம்பேத்கா் நகரில் உள்ள தாய்வழி பாட்டி சின்னப்பொண்ணு வீட்டில் லாவண்யா தங்கியிருந்தாா்.
திருச்செங்கோடு ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள சத்துமாவு நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், வெள்ளிக்கிழமை பகலில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் லாவண்யா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.