முகப்பு
நாமக்கல்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் அருகே வேலகவுண்டம்பட்டியில் தனியாா் நிறுவன தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:42 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே வேலகவுண்டம்பட்டியில் தனியாா் நிறுவன தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சீதாராம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). இவா் திருச்செங்கோட்டை அடுத்த வெப்படையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கஸ்தூரி (40), திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா்களுக்கு மகள்கள் கிருத்திகா (23), காா்த்திகா (20), மகன் சௌந்தரராஜன் (19) உள்ளனா். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி வேலை சென்ற சுரேஷ், இரண்டு நாள்களாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் சுரேஷுடன் வேலை செய்யும் முத்து என்பவா் சுரேஷின் மனைவி கஸ்தூரிக்கு 10 ஆம் தேதி கைப்பேசியில் தொடா்புகொண்டு, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புள்ளாட்சிபட்டி பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அங்கு சென்ற கஸ்தூரி, அங்கிருந்தவா்களின் உதவியுடன் சுரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வேகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் கஸ்தூரி அளித்த புகாரில், தனது கணவா் கால் வழி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும், கால் வலி காரணமாக அவா் தூக்குத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.