முகப்பு
விருதுநகர்

பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 24 ஜூலை 2026, 7:30 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே எம். சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்வா் முருகன். இவரது மனைவி ஈஸ்வரி (38). பட்டாசு ஆலை தொழிலாளி.

இந்த நிலையில் தம்பதியிடையே கடந்த இரு நாள்களாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லலாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments