முகப்பு
தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
நாமக்கல்

தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 9 வாகனங்கள் பறிமுதல்

ராசிபுரம் பகுதியில் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 வாகனங்களை மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் சோதனையில் பறிமுதல்

நாமக்கல்

தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 9 வாகனங்கள் பறிமுதல்

ராசிபுரம் பகுதியில் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 வாகனங்களை மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் சோதனையில் பறிமுதல்

Updated On : 2 மார்ச், 2026 at 9:33 PM
தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
பகிர்:

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 வாகனங்களை மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.

ராசிபுரம் எல்லைக்கு உட்பட்ட வெண்ணந்தூரில் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில், தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள் பிடிக்கப்பட்டு, வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல, ராசிபுரம் பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 வாகனங்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் பிடிக்கப்பட்டு அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வாகனத் தணிக்கையில் மொத்தம் 9 வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதிக்குப் புறம்பாக அதிக பாரம் ஏற்றிச் சென்ற 4 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று வாகன சிறப்பு தணிக்கை ராசிபுரம், மங்களபுரம், ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →